LATEST NEWS
சூப்பர் குட் நியூஸ்..! விவசாயிகளுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை – வேளாண் அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வினோத், விவசாயிகளுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக முதற்கட்டமாக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், ரூ.34.72 கோடி நிதி ஒதுக்கீட்டில் நெல் விதை மானியம் வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தரமான நெல் விதைகள் விவசாயிகளுக்கு மலிவான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதமாக, ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய ‘விவசாயி செயலி’ அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பயிர்ச் சேதங்களால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்புகளைத் தடுக்கும் நோக்கில், தமிழகத்தின் அனைத்து 38 மாவட்டங்களுக்கும் பயிர்க்காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு முழுமையாக வழங்கப்படும் என அமைச்சர் வினோத் உறுதியளித்துள்ளார். விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், நவீனத் தொழில்நுட்பத்தை வேளாண்மையில் புகுத்தவும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
