LATEST NEWS
“எனக்கு என் அப்பாவின் முகத்தைப் பார்க்கணும்… தயவுசெய்து அந்தத் துணியை எடுங்க சார்” — பிறர் உயிர் காக்க உயிரைத் தியாகம் செய்த தேசிய வீரர் ராஜேஷின் உடலைக் கண்டு கதறிய மகன்..!!
தேசிய த்ரோபால் விளையாட்டு வீரரும், மீட்புப் படை பயிற்சியாளருமான 37 வயதான ஆர். ராஜேஷ், தனது உயிரைப் பணைய வைத்துப் பிறர் உயிர் காத்த வீரச் செயல் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரியங்கோடை ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்த விவசாயி ஒருவரைக் காப்பாற்றுவதற்காக, ராஜேஷ் கொந்தளிக்கும் ஆற்று நீரில் தயங்காமல் நீந்திச் சென்றார்.
மீட்புப் பணியின் போது, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த விவசாயியைக் காப்பாற்றத் தான் அணிந்திருந்த மிதவை அங்கியை அவரிடம் கழற்றிக் கொடுத்துள்ளார். அந்த விவசாயி பத்திரமாகப் மீட்டெடுக்கப்பட்ட போதிலும், மிதவை அங்கி இல்லாததால் ஆற்றின் பலத்த அடிநீரோட்டத்தில் சிக்கிய ராஜேஷ் பரிதாபமாக அடித்துச் செல்லப்பட்டுத் தன் உயிரைத் தியாகம் செய்தார்.
தனது தந்தையின் உடலைக் கண்டு கதறி அழுத ராஜேஷின் இளைய மகன் அர்ஷான், “எனக்கு என் அப்பாவின் முகத்தைப் பார்க்கணும்… தயவுசெய்து அந்தத் துணியை எடுங்க சார்” என்று கண்ணீருடன் கெஞ்சிய காட்சி அனைவரின் நெஞ்சையும் பிளப்பதாக இருந்தது. பிறர் உயிர் வாழத் தன் உயிரையே கொடையாகக் கொடுத்த இந்த வீரத் தியாகியின் மறைவு அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
