LATEST NEWS
“கடனை அடைக்கத்தான் இங்க வந்தேன்” புது துணி எடுங்கடான்னு என் பிள்ளைக்கிட்ட கடைசியா பேசினார்… மீட்புப் பணியில் உயிரைத் தியாகம் செய்த ராஜேஷின் மனைவி கண்ணீர்..!!
கேரள மாநிலம் கண்ணூர் செறுபுழா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, சிக்கியிருந்த விவசாயி ஒருவரைக் காப்பாற்ற தனது உயிர் காக்கும் கவசத்தை (Life Jacket) கழற்றித் தந்து, தன் உயிரையே தியாகம் செய்த பேரிடர் மீட்புத் தன்னார்வலர் ஆர். ராஜேஷின் (36) மரணம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த அவரது மறைவால், தற்பொழுது அவரது மனைவி லட்சுமி, இரு மகன்கள் மற்றும் வயதான பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.
கடந்த வாரம் தனது குடும்பத்தினருக்கு வீடியோ கால் மூலம் பேசிய ராஜேஷ், “நமது குடும்பக் கடன்களை அடைக்கவும், குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கவும், நமக்கென ஒரு சொந்த வீடு கட்டவுமே நான் இந்த மீட்புப் பணிகளுக்கு வந்து தங்கியிருக்கிறேன்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார். ஓணம் பண்டிகைக்குப் புதிய ஆடைகளை வாங்குமாறும், தன்னால் நேரில் வர முடியாவிட்டாலும் அதற்கான பணத்தை அனுப்பி வைப்பதாகவும் தன் மகனிடம் கடைசியாகப் பேசியுள்ளார். கையில் கட்டுப்போட்டிருந்த தன் மகனின் நிலையை வீடியோ காலில் கண்டு அவர் கண்ணீர் விட்டு அழுத நினைவுகளை அவரது குடும்பத்தினர் தற்பொழுது கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர்.
தங்கள் குடும்பத்தின் ஒற்றைத் தூணாக இருந்த ராஜேஷை இழந்து தவிக்கும் இந்த ஏழைக் குடும்பத்திற்கு, நிரந்தர வாழ்வாதாரத்திற்கான வேலை வாய்ப்போ அல்லது ஏதேனும் ஒரு தகுந்த உதவியோ கிடைத்தால் மட்டுமே அவர்களால் அடுத்தகட்ட வாழ்க்கையை நகர்த்த முடியும் என அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
