ஆச்சரியம் !..ஆனால் உண்மை 60 வயது முதியவர் உடம்பில் வளர்ந்து வந்த ….. அதிர்ச்சியில் மருத்துவர்கள்?…. - cinefeeds
Connect with us

TRENDING

ஆச்சரியம் !..ஆனால் உண்மை 60 வயது முதியவர் உடம்பில் வளர்ந்து வந்த ….. அதிர்ச்சியில் மருத்துவர்கள்?….

Published

on

ஆச்சரியம்!.. ஆனால் உண்மை , மனிதனின் உடம்புக்குள் வளர்ந்து வந்த அட்டை பூச்கள் , முதியவர் ஒருவருக்கு தொடர்ந்து இருமல் தொந்தரவு இருந்து வர, பரிசோதனையில் அவருடைய தொண்டையில் அட்டைப் பூச்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது.சீனாவைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் 2 மாதங்களாக இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக அவர் மருத்துவமனைக்கு செல்ல, அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதிலும் இருமலுக்கான காரணம் தெரியாமல் இருந்துள்ளது. அதனால் மருத்துவர்கள் அவருக்கு பிரான்கோஸ்கோபி சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட பிரான்கோஸ்கோபி பரிசோதனையின்போது அவரது உடலில் 2 அட்டைப் பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு அட்டைப்பூச்சி அவருடைய வலது நாசியிலும், இன்னொன்று அவருடைய தொண்டைப் பகுதியிலும் இருந்துள்ளது. பின்னர் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அந்த அட்டைப் பூச்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

Advertisement

 

பாதிக்கப்பட்ட முதியவர் மலைப்பகுதியிலிருந்த அருவியில் தண்ணீர் அருந்தியபோதே, அதில் சிறியதாக இருந்த அட்டைப் பூச்சிகள் அவருடைய உடலுக்குள் சென்றுள்ளன. கிட்டத்தட்ட 2 மாதங்கள் அவருடைய உடலில் இருந்த அந்த அட்டைப் பூச்சிகள் அவரின் ரத்தத்தைக் கொண்டு வளர்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிகிச்சை முடிந்து தற்போது முதியவர் குணமடைந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in