Uncategorized
பானிபூரி விற்ற இளைஞன் இப்போது கிரிக்கெட் வீரராக வளம் பெற்று வருகிறார்…அவர் யார் தெரியுமா?….
பானிபூரி விற்ற இளைஞன் கிரிக்கெட் வீரராக வளம் வருகிறார்… உத்திர பிரதேச மாநிலத்தில் 17 வயது கிரிக்கெட் வீரர் யஷஸ்வி என்பவர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.மும்பையில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்பவர் கிரிக்கெட் மீதான ஆர்வத்தினால் தனது 11 வயதில் இருந்தே தெருக்களில் பாணிப்பூரி விற்று அதன்மூலம் வரும் வருமானத்தை கொண்டு கிரிக்கெட் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், உள்ளூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே என்ற தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய நிலையில், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.இந்த உலக்கோப்பை தொடர் வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென் ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், விஜய் ஹசாரே டிராஃபியில் அதிக ரன் குவித்தது இவர் தான் என்பது குறிப்பிடதக்கது. மேலும், பட்டியல் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கவுசல் மற்றும் சஞ்சு சாம்சன் பட்டியலில் விஜய் ஹசாரேவும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.