VIDEOS
நான் அத செய்யும்போது என்ன காரி துப்புவாங்க…. பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்ட வீடியோ….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி.
இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது. வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கதாநாயகனாக நடித்து வரும் கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். தினம்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கோபி என்கிற சதீஷ் விலங்குகள் குறித்து ஒரு வீடியோவை தற்போது இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதாவது வீட்டில் நாம் பாசமாக வளர்க்கும் நாய்கள் நோய் வாய் பட்ட பிறகு அவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் விடுவது தவறான செயல். ஒரு நாயை வளர்த்தால் அதற்கு நாம் தான் பெற்றோர்.
அதனால் நாய்களுக்கு ஏதாவது நோய் வந்தால் அதற்கு உரிய மருத்துவம் வழங்க வேண்டும் என அவர் வீடியோவில் கூறியுள்ளார். மேலும் இது போன்ற நாய்களுக்கு உணவளித்து அதனை வீடியோவாக பதிவேற்றும் போது என்னை பார்த்து காரித் துப்புவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/GyBeka3a6rk
