Uncategorized
‘தென்றல் வந்து என்னை தொடும்’சீரியல் நடிகர் ராஜ்குமார் மனோகரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…
சில வருடங்களாகவே தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது .
வெள்ளித்திரை நடிகர்கள், நடிகைகளுக்கு சமமாக சின்னத்திரை நடிகர்களையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது.
ஒவ்வொரு சேனல்களும் தங்களுடைய டிஆர்பிக்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது .
அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான டிவி என்றால் அது விஜய் டிவி தான்.இந்த டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களும், நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று தான் ‘தென்றல் வந்து என்னை தொடும்’.
இந்த சீரியல் ஒளிபரப்பாகிய சிறிது நாட்களிலேயே தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டது.
இந்த சீரியலில் கதாநாயகியாக அபி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பவித்ரா. கதாநாயகனாக வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் வினோத் பாபு.
வெற்றிச்செல்வனின் இரண்டாவது அண்ணனாக அன்புச்செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ராஜ்குமார் மனோகரன்.
இவர் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தார். இவர் ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இவர் தந்தை மனோகரன் தாய் சாந்தாமணி. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார் ,சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘தங்கம்’ சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி, வாணி ராணி ,என் பெயர் மகாலட்சுமி, வள்ளி , பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலிலும் நடித்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் விருதுகளில் நகைச்சுவை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
நடிகர் ராஜ்குமார் மனோகரன் ராகவி என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.