Uncategorized
நடிகை சீமாவின் கணவர் ஒரு இயக்குனரா?… வைரலாகும் குடும்ப புகைப்படம்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சீமா, 1957 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி பிறந்தார்.
இவர் கேரளாவை சேர்ந்தவர் குடும்பத்துடன் சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டனர் இவருடைய ஏழு வயதில் தந்தையும் தாயும் விவாகரத்து செய்தனர்.
இதனால் சீமா தன்னுடைய தாயாருடன் வசித்து வந்தார்.நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
இதனால் தன்னுடைய 13 வயதில் லிசா பேபி இயக்கத்தில் வெளியான நிலவே நீ சாட்சி என்ற படத்தில் நடனம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இயக்குனர் ஐ வி சசியின் இயக்கத்தில் வெளிவந்த “அவளுட ராவுகள்”என்ற படத்தின் மூலமாக மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்போது அவருக்கு வயது 19 .அதன் பிறகு இவர் மலைச்சாரல் கைவரிசை, பகலில் ஒரு இரவு, காளை , பகவதி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இவர் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார் .
இவருக்கு தமிழை விட மலையாளத்தில் தான் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் சீரியல் பக்கம் தனது காலடித்தடத்தை பதித்தார். இவர் தங்கம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், வம்சம் ,செம்பருத்தி போன்ற பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் சன் டிவி ,ஏசியநெட் ,ராஜ் டிவி, அமிர்தா டிவி, கலைஞர் டிவி, ஸ்டார் விஜய் ,மழவில் மனோரமா, ஜீ தமிழ் ,சூர்யா டிவி போன்ற டிவிகளில் சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் சங்கமம்,என்னிலே நான்,இணக்கம்,பிரபல சமையலறை,நகைச்சுவை சூப்பர் நைட்,லால் சலாம் போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
நடிகை சீமா இயக்குனர் சசி என்பவரை ,திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .நடிகை சீமாவின் கணவர் சசி உடல்நிலை குறைவால்2017 ஆம் ஆண்டு காலமானார் .
தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.