LATEST NEWS
“என் மேல 40 கேஸ்… நேரா ஜெயில்ல இருந்து வர்றேன்..!” அதிமுக தளவாய் சுந்தரத்திற்கு கே.என். நேரு கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!
தமிழகச் சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மற்றும் அமைச்சர் கே.என். நேரு இடையே அரங்கேறிய காரசாரமான விவாதமும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரின் எதிர்வினைகளும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதலமைச்சரின் மேஜை மீது ஏறியது யார், சட்டையைக் கிழித்தது யார் என்ற கேள்விகளை முன்வைத்து, அதுகுறித்த வீடியோ ஆதாரங்களை தயவுசெய்து வெளியிட வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்னதாகப் பேசிய தளவாய் சுந்தரம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நீங்கள் எப்படி அந்த மேஜையின் மீது ஏறி நடனமாடினீர்கள் என்று திமுகவினரை நோக்கிக் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் கே.என். நேரு, “நான் எம்.பி.யாக இருந்தபோது திமுக அரசு என் மீது 26 வழக்குகளையும், அப்போதைய அதிமுக அரசு 14 வழக்குகளையும் பதிவு செய்தது; நான் நேராக சிறையிலிருந்துதான் இங்கு வந்துள்ளேன்” எனத் தனது அரசியல் போராட்ட வரலாற்றை ஆக்ரோஷமாகப் பதிவு செய்தார்.
சட்டமன்றப் பேரவைக்குள் இருதரப்பிற்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியதைத் தொடர்ந்து, குறுக்கிட்ட சபாநாயகர் அவையை அமைதிப்படுத்த முயன்றார். தளவாய் சுந்தரம் பேசிய கருத்துகளுக்கு அவையில் அமைச்சர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, சபாநாயகர் இருதரப்பையும் வன்மையாகக் கண்டித்தார். “நீங்கள் இருவரும் சபாநாயகர் அவைக்கு வெளியே தனியாக ஒரு மேடை அமைத்துப் பேசிக் கொள்ளுங்கள், அதை நாங்களும் பொதுமக்களோடு சேர்ந்து கேட்க ஆவலாக உள்ளோம்” என்று சபாநாயகர் தனது கண்டனத்தையும் சாடலையும் நகைச்சுவை கலந்த எச்சரிக்கையாகப் பதிவு செய்தார்.
