LATEST NEWS
என் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம்…..! மகாநதி இப்படித்தான் உருவானது….. அனுபவத்தை பகிர்ந்த கமல்ஹாசன்….!!!!

கமலஹாசன், 80’ஸ் காலகட்டத்தில் இருந்து நடித்துவரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தன்னுடைய அசாத்திய நடிப்பால் மக்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடல், பாடல் ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். மக்கள் கட்சி இயக்கம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு பக்கம் அரசியல், ஒரு பக்கம் சினிமா என்று பிசியாக இருக்கும் இவர் சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவர் நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படம் வசூலிலும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி, நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர் சமீபத்தில் ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். அதாவது 1994 ஆம் ஆண்டு கமலஹாசன், சுகன்யா, பூர்ணம் விஸ்வநாதன் ஆகிய நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மகாநதி.
இந்த திரைப்படத்தில் மனைவியை இழந்த கமலஹாசன் தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் கமலஹாசன் மற்றொருடன் இணைந்து பைனான்ஸ் கம்பெனி தொடங்க அந்த கம்பெனி பார்ட்னர் பணத்துடன் தப்பி விடுகிறார். பின்னர் ஜெயிலுக்கு சென்ற கமல்ஹாசன் தனது மகள் மற்றும் மகனை இழந்து விடுகிறார். பின்னர் அவரை தேடி கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்கிறார். மகனை ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார். தனது மகளை கொல்கத்தாவில் சோனாகாட்சி என்ற பகுதியில் தவறான தொழில் செய்யும் இடத்தில் மாட்டிக் கொண்டுள்ளதாக தகவல் வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்த நிலைக்கு காரணமானவரை பழிவாங்க முயற்சிப்பது தான் கதை.
இந்த திரைப்படம் தனது வாழ்வில் நடந்த உண்மை கதை என்று தெரிவித்துள்ளார். அதாவது கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசனையும் அக்சராஹாசனையும் அவரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பணத்திற்காக அவர்களை கடத்த முயற்சி செய்தனர் என்றும் அது தெரிய வந்த பிறகு அந்த திட்டத்தை முறியடித்தார் என்று கூறினார். இந்த சம்பவத்தை வைத்து தான் மகாநதி திரைப்படத்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.