LATEST NEWS
“எம்.எல்.ஏ-க்களுக்கு கார்னா… எங்களுக்கு பைக் கொடுங்க” முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு எதிராகத் திரண்ட ஊராட்சித் தலைவர்கள்..!!
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, தங்களுக்கும் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக மனு ஒன்றை அளித்துள்ளனர்.
எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கப்படும் நிலையில், கிராமப்புறங்களில் நேரடியாக மக்களுடன் பணிபுரியும் தங்களுக்குப் பயணக் கடமைகளை எளிதாக்க பைக் வழங்க வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கை புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசுத் தரப்பில் கார் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அடிமட்ட மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்கான வாகனத் தேவையை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
