LATEST NEWS
” காது மட்டும் வாய் பேசமுடியாத பெண் வென்ற 1 கோடிரூபாய் ” … உலகிலேயே முதல் முறையை தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாற்றுத்திறனாளி பெண்…
முதல் முறையாக ஒரு மாற்று திறனாளி பெண் கோடீஸ்வரி நிகழ்ச்சி. அதில் கலந்து கொண்டு கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்து மொத்த ரூபாய் 1 கோடியும் பெற்றுள்ளார் மதுரையை சேர்ந்த கவுசல்யா . பிரபல டிவியான கலர்ஸ் தமிழ் பெருமையுடன் வழங்கிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் பெண்களுக்கான கோடீஸ்வரி நிகழ்ச்சி .இந்த நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 13 ஆம் தேதியிலிருந்தே தொடங்கப்பட்டது.
அன்றீலிருந்தே பல பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் முதல் முறையாக மதுரையை சேர்ந்த மாற்றுதிறனாளி கவுசல்யா . இவருக்கு வாய் பேசமுடியாது மற்றும் காது கேட்காது . அப்படி இருக்க வாய் அசைவை வைத்தே கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து கோடீஸ்வரி பட்டத்தை வென்று உள்ளார். இது ஒரு உலக சாதனையாகும் .
இதுவரை மாற்று திறனாளியான எந்த ஒரு பெண்ணும் இந்த பட்டத்தை வென்றது இல்லை இதுவே முதல் முறை என்று பெருமையுடன் தெரிவித்து இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது . மேலும் மதுரை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகின்றார்.