LATEST NEWS
கழுத்தில் கயிறு மாட்டி தொங்கிய நபர்… உயிரை பறிக்கத் துடித்த எமன்… கடைசி நொடியில் ஆக்ரா பாலத்தில் நடந்த த்ரில்லிங் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் பாலத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்னோடா பாலத்தில் நடந்த இச்சம்பவத்தில், குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் தகராறே இளைஞரின் இந்த தீவிர முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
https://twitter.com/madanmohansoni/status/2080496190551130235/video/1
பாலத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்குவதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், நொடியும் தாமதிக்காமல் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து ஓடி வந்தனர். சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்பட்ட அவர்கள், தூக்கில் தொங்கிய இளைஞரை மீட்டு உடனடியாகக் கீழே இறக்கினர். கிராம மக்களின் இந்தச் சமயோசிதமான செயலால் இளைஞரின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டது.
இருப்பினும், தற்கொலை முயற்சியால் அந்த இளைஞரின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மீட்கப்பட்ட அவரை உடனடியாகக் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
