CINEMA
இயக்குனர் பாலாவை நம்பி எல்லாம் வேஸ்ட்… அதனால தான் சினிமாவை விட்டு விலகிட்டேன்… சாட்டை பட நடிகர் ஷாக் நியூஸ்..!!

கடந்த 2012 ஆம் வருடம் அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் யுவன். இந்த படத்தை தொடர்ந்து கமரகட்டு, கீரிப்பிள்ளை போன்ற படங்களில் நடித்தார். யுவன் ஒரு சில படங்களில் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு சினிமாவிலிருந்து காணாமல் போனார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசி அவர், “நான் இதுவரை 13 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை. சினிமாவில் லக் இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என்பதை நான் பின்பு தான் தெரிந்து கொண்டேன். சாட்டை படம் நல்ல படம்.
நான் நடித்து முடித்த படங்கள் எதுவும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. சாட்டை படத்திற்குப் பிறகு நான் பாலா படத்தில் நடிக்க மாட்டேன். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப புரோட்டா போடவும் கற்றுக் கொண்டேன். அதுவும் இன்றி உடம்பை போட்டு தாடி வளர்த்து பயங்கரமான உடல் உழைப்பை போட்டேன். படத்தின் பரமோசனுக்காக போட்டோக்களை எடுத்து பாலா வெளியிட்டார். படம் எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியான நிலையில் திடீரென்று படம் டிராப் ஆனது. இந்த படத்தில் நான் நடிக்க மிகவும் எதிர்பார்த்து இருந்து எனக்கு இன்று வரை ஏன் அந்த படம் டிராப் ஆனது என்று தெரியவில்லை. இந்த விரக்தியால் தான் சினிமாவில் இருந்து விலகினேன்” என்று கூறி இருக்கிறார்.