LATEST NEWS
தப்பு செஞ்சவன் யாரா இருந்தாலும் உடனே ஆக்ஷன்.. தவெக நிர்வாகியின் பதவி பறிப்பு… அதிரடியில் இறங்கிய முதல்வர் விஜய்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பெண்ணைக் கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் சரவணகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி மற்றும் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது எந்தவித தயக்கமும் இன்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், அதன்படி சரவணகுமாரின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கட்சியில் இடமில்லை என்பதையும், ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டில் எந்தவித சமரசமும் இருக்காது என்பதையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்த தவெக தலைமை தீவிரமாக உள்ளது.
கட்சியின் நற்பெயரைப் பாதுகாக்கவும், தொண்டர்கள் மற்றும் மக்களுக்குத் தெளிவான செய்தியைக் கொண்டு சேர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கட்சியின் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
