LATEST NEWS
“உடனே வேண்டும்.. முதல்வர் விஜய்க்கு மேயர் பிரியா அனுப்பிய அவசரக் கடிதம்..!” கோட்டையை அதிரவைத்த சென்னை மாநகராட்சியின் மெகா அதிரடி மூவ்..!!
சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரி, முதலமைச்சர் விஜய்க்கு சென்னை மேயர் பிரியா அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளதாகத் துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாமன்றக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசு தற்போது பல்வேறு திட்டங்களைக் கடன் வாங்கித்தான் நிறைவேற்றி வருகிறது என்று குறிப்பிட்டதுடன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார்களை வழங்கும் தாராள மனதுடைய அரசு, சென்னை மாநகராட்சியின் அடிப்படைத் தேவைகளுக்கான நிதியையும் உடனே வழங்க வேண்டும் எனத் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குத் தமிழக அரசு போதுமான நிதி வழங்கவில்லை எனக் கண்டித்து, எதிர்கட்சியான திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களே கருப்புச் சட்டை அணிந்து மாமன்றக் கூட்டத்திற்கு வந்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் இடையே நிதிப் பகிர்வில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
