LATEST NEWS
“வெளிநாட்டுப் பிரதமர்களே என் பேச்சைக் கேக்குறாங்க, ஆனா ஆனா தமிழ்நாட்டில் மட்டும் இப்படி செஞ்சிட்டாங்களே..?!” கோட்டையை உலுக்கும் ஜோதிடரின் பகீர் வாக்குமூலம்!
தமிழக அரசியல் களத்திலும் திரையுலகிலும் முன்னணி ஜோதிடராக அறியப்படும் ரத்தன் பண்டிட், “இனி நான் தமிழ்நாட்டிற்கே வரப் போவதில்லை” என்று அதிரடியாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ரத்தன் பண்டிட்டுக்கு ‘முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு அதிகாரி’ என்ற பவர்ஃபுல் அரசுப் பதவி வழங்கப்பட்டது. ஆனால், மதச்சார்பற்ற ஆட்சியில் ஒரு ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்குவதா என எதிர்க்கட்சிகளும் தவெக கூட்டணித் தோழமை அமைப்புகளும் சட்டமன்றத்தில் கடும் முட்டுக்கட்டைப் போட்டதால், முதலமைச்சர் விஜய் தரப்பிற்கு ஏற்பட்ட மெகா அரசியல் அழுத்தத்தின் காரணமாக அந்தப் பதவி நியமன அரசாணை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.
இந்த அரசுப் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தால் கடும் மன வேதனை அடைந்து வெளிநாட்டிற்குச் சென்ற ரத்தன் பண்டிட், அண்மையில் வெளியிட்ட வீடியோ நேர்காணலில் பல அதிரடி உண்மைகளை ஓப்பனாகப் போட்டுடைத்துள்ளார். “கடந்த 2026 தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் கொடூரமாகத் தோல்வியடைவார் என்று நான் முன்கூட்டியே சரியாகக் கணித்தேன். பிற மாநில முதலமைச்சர்களும் வெளிநாட்டுப் பிரதமர்களும் எனது ஆலோசனைகளைக் கேட்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் என் மீது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி விமர்சனம் செய்ததால் தான் இனி தமிழ்நாட்டுப் பக்கமே வரப்போவதில்லை என்ற முடிவை எடுத்தேன்” என்று அவர் கர்ஜித்துள்ளார். தவெக அரசு அமைந்த தொடக்கக் காலத்திலேயே வெடித்த இந்த மெகா ஜோதிடர் பதவி நியமனச் சர்ச்சை மற்றும் ரத்தன் பண்டிட்டின் ஓபன் டாக் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
