LATEST NEWS
“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடுத்த அதிரடி வழக்கு..திமுக தலைவர் ஸ்டாலினுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி டெட்லைன்.. அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..!!”
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோவுடன் தன்னைத் தொடர்புபடுத்தி அவதூறாகப் பேசியதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில் ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் தரப்பு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கை விசாரித்த நீதிமன்றம், தங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விரிவான பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்த அவதூறு வழக்கில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
