LATEST NEWS
“ஸ்டாலின் மிசாவிலேயே கைது செய்யப்படல” டிடென்ஷன் காப்பி இல்லாத ஒரே தியாகி அவர்தான்.. ஆதாரத்தை அழிச்சிட்டாரு.. அமைச்சர் நிர்மல் குமார் பகீர் பேட்டி..!!
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், அதற்கான ‘கைது ஆணை நகல்’ (Detention Copy) அவரிடம் இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவசரநிலைக் காலத்தில் ‘Detention Copy’ இல்லாத ஒரே தியாகி ஸ்டாலின் தான் என்றும், அவர் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகவே அப்போது கைது செய்யப்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க.வினர் தங்களது ஆட்சிக் காலத்தைப் பயன்படுத்தி, மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை நிலைநிறுத்த, தொடர்புடைய ஆவணங்களையும் ஆதாரங்களையும் திட்டமிட்டு அழித்துவிட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். மிசா காலக் கைதுகளில் திருட்டு, வழிப்பறி மற்றும் பெண்கள் தொடர்பான பொதுக் குற்றச்சாட்டுகளும் அடங்கும் என்பதால், ஸ்டாலின் மிசா தியாகி அல்ல என்று அவர் சட்டப்பேரவையிலும் வெளியிலும் வாதிட்டுள்ளார்.
நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 50-வது ஆண்டையொட்டி, அப்போதைய சிறைக் கொடுமைகள் குறித்தும் மு.க.ஸ்டாலினின் சிறைவாசம் குறித்தும் அண்மையில் விவாதங்கள் எழுந்துள்ள சூழலில், அமைச்சரின் இந்த அதிரடிப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
