LATEST NEWS
“அடேங்கப்பா… இதுக்கு பேரு தான் பக்கா பிளானிங்..” ரயில்வே ஸ்டேஷனில் நடந்த தரமான சம்பவம்… வைரலாகும் 5 செகண்ட் வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த பிறகு, அந்த நபரின் டைமிங் மற்றும் புத்தி கூர்மையைக் கண்டு நீங்களும் நிச்சயம் பாராட்டுவீர்கள். ரயிலில் பயணிக்கும் தனது நண்பர் அல்லது தெரிந்த நபருக்குப் பார்சல் அனுப்ப ஒரு நபர் கையாண்ட விசித்திரமான முறை, முதல் பார்வையில் நம்ப முடியாததாக உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த காரியத்தைச் செய்ய ரயில் நிற்கவும் இல்லை, ரயிலில் இருந்த பயணி கீழே இறங்கவும் இல்லை.
வைரல் வீடியோவில், ஒரு நபர் ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் கையில் ஒரு பார்சலுடன் நின்று கொண்டு ரயிலுக்காகக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ரயில் அங்கு நிற்காது என்பது அவருக்கு நன்றாய் தெரிந்திருந்ததால், சாமானைக் கொடுக்க அவருக்குச் சில நொடிகள் மட்டுமே அவகாசம் இருந்தது. ரயில் அருகில் வந்ததும் அவர் உஷாராகி, ஒவ்வொரு பெட்டியின் கதவையும் பார்த்துத் தன் நண்பரைத் தேடுகிறார். அதே நேரத்தில் ரயிலுக்குள் இருந்த பயணியும் அவரைக் கண்டு கையை அசைத்துக் காட்டுகிறார். சரியான கோச் கிடைத்துவிட்டதை இருவரும் உணர்ந்து கொள்கின்றனர்.
சரியான கோச் வந்ததும், அந்த நபர் சிறிதும் நேரத்தை வீணடிக்காமல் பார்சலை ரயிலின் கதவை நோக்கி தூக்கி வீசுகிறார். உள்ளே இருந்த பயணியும் முன்பே தயாராக இருந்ததால், மிக வேகமாக அந்தப் பார்சலைப் பிடித்துக் கொள்கிறார். ஒரு கைக்கும் இன்னொரு கைக்கும் இடையே மிகச் சரியாகப் பார்சல் மாறி விடுகிறது. இருவரும் முன்பே திட்டமிட்டதால் தான் இந்தச் சம்பவம் இவ்வளவு கச்சிதமாக நடந்துள்ளது. வீடியோ வைரலானதை அடுத்து, அந்த நபரின் இந்தத் துல்லியமான டைமிங்கையும் சமயோசித புத்தியையும் இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
