நம்பவே முடியல… 1993-இல் விஷம் வச்சு அழிக்க முயன்ற அரசு… 30 வருஷம் கழிச்சு மீண்டு வந்த அபூர்வ முயல்கள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்பவே முடியல… 1993-இல் விஷம் வச்சு அழிக்க முயன்ற அரசு… 30 வருஷம் கழிச்சு மீண்டு வந்த அபூர்வ முயல்கள்..!!!

Published

on

1865-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தின் எண்டர்பி தீவு அருகே கப்பல் விபத்துக்கள் ஏற்பட்டபோது, அதில் தப்பித்துத் தீவில் சிக்கும் மனிதர்களுக்கு உணவாக பயன்பட வேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலியாவிலிருந்து சில முயல்கள் கொண்டுவரப்பட்டு அங்கே விடப்பட்டன. அந்தத் தீவு மிகவும் கடுமையான குளிர், பலத்த காற்று மற்றும் அதிக ஈரப்பதம் நிறைந்த சூழலைக் கொண்டிருந்த போதிலும், உலகிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த முயல்கள் அந்தத் தகவமைப்புக்கு ஏற்ப தப்பிப் பிழைத்து வாழ்ந்தன.

சுமார் 127 ஆண்டுகள் கழித்து 1993-ஆம் ஆண்டில் அந்த முயல்களை ஆய்வு செய்தபோது, அவை முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய தனித்துவமான இனமாக மாறியிருந்தது தெரியவந்தது. சுமார் 2 கிலோ எடையும், வெள்ளி-சாம்பல் நிற அமைப்பும், கருமை கலந்த நீல நிற உடலின் உட்பகுதியும் கொண்டு அவை காட்சியளித்தன. மேலும் அவற்றின் காதுகள், தலை மற்றும் வால் பகுதிகள் இருண்ட/கருப்பு நிறத்தில் அமைந்திருந்தன. பிரிட்டிஷ் சில்வர்-கிரே முயல்களின் வழித்தோன்றல்களான இவை, நீண்ட காலம் தனித்து வாழ்ந்ததால் இந்த தனித்துவமான உருவ அமைப்பைப் பெற்றன.

Advertisement

20-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இம்மூயல்கள் தோண்டும் பொந்துகளால் அத்தீவின் இயற்கை சூழலும், கடல் சிங்கங்களின் குட்டிகளும் ஆபத்துக்குள்ளாகின. இதனால் நியூஸிலாந்து அரசு 1993-இல் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தி முயல்களை அழிக்கத் தொடங்கியது. இருப்பினும், அரிதான இந்த முயல் இனத்தைக் காப்பாற்ற ‘கன்சர்வேஷன் சொசைட்டி’ முயன்று 50 முயல்களைப் பிடித்தது. 1994-இல் எண்டர்பி தீவிலிருந்து முயல்கள் முற்றிலும் அகற்றப்பட்ட போதிலும், மீட்கப்பட்ட அந்த 49 முயல்கள் மூலம் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறப்புப் பெருக்கத் திட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த அபூர்வ முயல் இனம் இன்றுவரை வெற்றிகரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in