இரக்கம் இல்லாத மரணம் “தீ” விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழப்பு:அதில் 6 தமிழர்கள்…! கதறும் உறைவினார்கள்.. - cinefeeds
Connect with us

TRENDING

இரக்கம் இல்லாத மரணம் “தீ” விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழப்பு:அதில் 6 தமிழர்கள்…! கதறும் உறைவினார்கள்..

Published

on

நேற்று சூடான் தலைநகர் கார்ட்டூமில் ஒரு மட்பாண்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தமிழர்கள், 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.சூடான் கார்ட்டூமில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அறிவிப்பு.கார்டூம்: சூடானில் (Sudan) உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் நடந்த எல்பிஜி டேங்கர் வெடிதத்தில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டனர். அதில் இந்தியாவை (Indians) சேர்ந்த 18 பேர் உயிரிழந்து உள்ளனர் மற்றும் 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று இந்திய மிஷன்  இன்று தெரிவித்துள்ளது.

கார்ட்டூமில் (Khartoum) பஹ்ரி பகுதியில் உள்ள சீலா பீங்கான் தொழிற்சாலையில் (Seela Ceramic Factory) நேற்று நடந்த சம்பவத்திற்கு பின்னர் 16 இந்தியர்கள் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.”சமீபத்திய அறிக்கைகளின்படி, இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப் படுத்தப்படவில்லை. அனால் 18 பேர் இறந்துவிட்டனர்” என்று இந்திய தூதரகம் (Indian Embassy) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இந்த விபத்தில் காணாமல் போனவர்களில் சிலர் இறந்தவர்களின் பட்டியலில் இருக்கலாம். ஏனெனில் உடல்கள் முழுவதும் எரிந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று அறிக்கையில் கூறியுள்ளது.

Advertisement

இன்று இந்திய தூதரகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் காணாமல் போன அல்லது இந்த விபத்தில் இருந்து தப்பிய இந்தியர்களின் விரிவான பட்டியலை வெளியிட்டது. அந்த தரவுகளின்படி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த விபத்தில் இருந்து தப்பிய முப்பத்து நான்கு இந்தியர்கள் சலூமி மட்பாண்ட தொழிற்சாலை (Saloomi Ceramics Factory) இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து சூடான் அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Advertisement