TRENDING
குழைந்தைகள் காப்பகத்தில் நடக்கும் விபச்சாரம் …??? 35 சிறுமிகளை சீரழித்த நபர்… திடுக்கிடும் தகவல் …
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 35 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் அரசு நிதி உதவியுடன் சிறுமியர் காப்பகம் நடத்தி வந்தார். அந்த குழந்தைகள் காப்பகத்தில் 35 சிறுமிகள் அடைக்கலமாக உள்ளனர். வெளியில் பார்ப்பவர்களுக்கு தான் அது காப்பகம் மாதிரி இயங்கி வருகிறது . உண்மையில் அந்த காப்பகம் முழுக்க முழுக்க விபச்சார விடுதியாக இயங்கி வருகிறது .
சிறுமிகளை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபட வைக்கின்றனர் என்றே தகவல் வெளியானது . அதனால் அந்த காப்பகத்தில் உடனடியாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு உண்மையை கண்டு பிடித்தனர். மேலும் அந்த சிறுமிகள் அனைவரையும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது . மேலும் அந்த 35 சிறுமிகளும் சீரழிக்க பட்டது நிரூபிக்கப்பட்டது.
அதனால் 8 பெண்கள் உட்பட 19 பேர் குற்றவாளிகள் என ஆதாரத்துடன் நிரூபித்தனர் மேலும் இதில் முதல் முக்கிய குற்றவாளியாக முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.