TRENDING
தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்று இறுதி சடங்கு செய்த மகன் ..?? அரசு உதவி செய்ய மறுப்பு ..!! கலங்கவைக்கும் தருணம்…

வறுமை கொடுமையால் மனைவியின் உடலை பைக்கில் கொண்டு வந்து இறுதி சடங்கு செய்த கணவர் . மனதினை குலைத்த சம்பவம் . பீகார் மாநிலத்தில் உள்ள பூர்னியா மாவட்டத்தின் ரானீபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷங்கர் ஷா (60). இவரது மனைவி சுஷீலா தேவி (50). இவர்களுக்கு பப்பு (32) என்ற மகன் உள்ளார். மகன் பப்பு மற்றும் கணவர் ஷங்கர் ஷாவும் பஞ்சாபில் தங்கி இருந்து கூலிவேலை செய்பவர்கள் . தனது சொந்த ஊரில் சுஷீலா மட்டும் வசித்து வருகிறார் .
அவருக்கு உடல் நிலை படுமோசமாக இருந்ததால் மகன் மற்றும் கணவர் மனைவியை பார்க்க சொந்த ஊரான ராணிபாரிக்கு வந்து உள்ளனர். சுஷீலாவை பீகார் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். மருத்துவ மனையில் சடலத்தை கொண்டு செல்ல வாகனம் தர மறுத்ததால் வாடகை வாகனத்திற்கோ 2500 ரூபாய் பணம் இல்லாததால் மகன் பப்பு பைக் ஓட்ட ஷங்கர் ஷா மனைவி சுஷீலாவின் புடவையை கொண்டு மகனின் இடுப்பில் இறுக்கி கட்டிவிட்டு .
பின்னர் கணவர் மனைவியை பத்திரமாக பிடித்து கொண்டு சொந்த ஊருக்கு வந்து இறுதி சடங்கு செய்தனர்.இந்த சம்பவம் பார்த்த அனைவருக்கும் கதிகலங்க வைத்தது. மேலும் அரசு பொதுமக்களுக்கு சேவை செய்யவில்லை என்பது தெளிவாக புரிகிறது இது போன்ற சம்பவத்தை பார்க்கும் பொழுது.