‘பகலில் என்ஜினீயர் இரவில் திருடன்’…! என்ற நிலையை உருவாக்கிய “கார்ப்ரேட் நிறுவனம்” சீர் அழிந்த இளைஞர்..? - cinefeeds
Connect with us

TRENDING

‘பகலில் என்ஜினீயர் இரவில் திருடன்’…! என்ற நிலையை உருவாக்கிய “கார்ப்ரேட் நிறுவனம்” சீர் அழிந்த இளைஞர்..?

Published

on

சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை காவல்நிலையத்திற்கு 5ஆம் தேதி அதிகாலை மும்பையில் இருந்து ஒரு ஃபோன் வந்துள்ளது. அதில் “உங்கள் பகுதியில் உள்ள எங்கள் வங்கியின் ஏடிஎம் கிளையில் திருடன் இருக்கிறான் அவன் . சிசிடிவி கேமாராவிற்கு ஸ்பிரே அடித்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருக்கிறான்” எனக் கூறியுள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த திருட்டில் ஈடுபட்ட இளைஞரை பிடிக்க சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்றபோது ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்துக்கொண்டிருந்தார் .

அதற்குள் அவரை வளைத்துப் பிடித்த போலீஸார் அவர் பயன்படுத்திய ஸ்பிரே, கடப்பாறை, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.பின்னர் போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உதயசூரியன் திருநின்றவூர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. டிப்ளமோ இன்ஜியரிங் படித்துள்ள உதயசூரியன் சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஒரு கார்பரேட் நிறுவனத்தில் மாதம் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்துவந்துள்ளார்.

Advertisement

கடந்த மார்ச் மாதம் அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், வேலை இழந்த உதயசூரியன் 20 ஆயிரம் சம்பளத்திற்கு வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஒரு நிறுவனம் மூடப்பட்ட நிலையில் இப்படி ஒரு திருடனாக மாறிவிட்டார் உதயசூரியன் .இதையடுத்து பணத்தேவை காரணமாக ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்ட உதயசூரியன், கொள்ளை அடிப்பது எப்படி என பல படங்களை பார்த்து நான் தெரிந்து கொண்டேன்.

இதுவரை அவர் இரண்டு ஏ டி ஏம் மையத்தில் கொள்ளையடித்து இருக்கிறார் ,இதுவரை அவர் 4 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடித்தது விசாரணையில் தெரிய வந்து உள்ளது . ஏற்கெனவே கொள்ளை அடித்தபோது கேமராவில் அவருடைய உருவம் சரியாகத் தெரியாததால் தப்பித்த உதயசூரியன், தற்போது வங்கியின் தலைமை அலுவலக கேமராவால் போலீஸாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in