TRENDING
1000 ரூபாய் தரங்க -ஏன் தரங்க பாக்கலாம் வாங்க.
உலகம் எங்கும் பல்வேறு வல்லரசுநாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்த வைரஸ் பாதிப்பிற்கு இந்தியா ஒன்றும் விடி விளக்குஅல்ல. தற்போதுவரை பலர் இந்த கோரோனோ வைரஸ் மூலம் பாதிப்படைத்தும் உள்ளனர். மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிககளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இந்த நிலையில் மத்திய அரசு கடந்த 22 மார்ச் அன்று சுய ஊரடங்கு உத்தரவுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அழைப்புவிடுத்து இருந்தார்.அதன்படி அதுவும் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு 144 தடையுத்தரவு 24 மார்ச் அன்று மாலை 6.௦௦ மணி முதல் பிறப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 1000 ரூபாய் வழங்க போவதாக ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்து உள்ளர். இந்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு 3250 கோடி நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளாராம்.
இந்த செய்தியானது பொது மக்கள் இடேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. என்றே கூறலாம்.