LATEST NEWS
“ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் குழந்தைகள்”… பாசமிகு தாயாக மாறிய நயன்தாரா… குழந்தைகளுடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்…!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட் திரையுலகில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதாவது அட்லி இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர உள்ள ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த நயன்தாரா ஹீரோயினியாக நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் நயன்தாரா அடிக்கடி அவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.நடிகையாக இருப்பதற்கு திருமணம் மற்றும் குழந்தைகள் எதுவும் தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நயன்தாரா இருந்து வருகிறார்.
ஒரு பக்கம் தனது மகன்களை பார்த்து கவனித்து வருவது மட்டுமல்லாமல் சினிமாவிலும் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சினிமாவில் பிஸியாக இருக்கும் நயன்தாரா தற்போது பாசமிகு தாயாகவும் மாறியுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
