“70 வயதிலும் இந்த வெறியா…!”அண்ணனுக்காக களமிறங்கிய ‘பவர் ஸ்டார்’… சோஷியல் மீடியாவை அதிரவைக்கும் மெகா பிரதர்ஸின் வைரல் பிக்சர்ஸ்…!”ரசிகர்களை தூக்கமே கெடுக்க வைக்கும் மாஸ்’ கூட்டணி… நாளை முதல் வேட்டை ஆரம்பம்…!” – cinefeeds
Connect with us

CINEMA

“70 வயதிலும் இந்த வெறியா…!”அண்ணனுக்காக களமிறங்கிய ‘பவர் ஸ்டார்’… சோஷியல் மீடியாவை அதிரவைக்கும் மெகா பிரதர்ஸின் வைரல் பிக்சர்ஸ்…!”ரசிகர்களை தூக்கமே கெடுக்க வைக்கும் மாஸ்’ கூட்டணி… நாளை முதல் வேட்டை ஆரம்பம்…!”

Published

on

மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கான பிரம்மாண்ட பூஜை விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சிரு 158 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழாவில், ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ஒரே மேடையில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், நாகபாபு என மூன்று மெகா நட்சத்திரங்கள் தோன்றியது ரசிகர்களுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இவ்விழாவில், பவன் கல்யாண் ‘கிளாப் போர்டு’ அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைக்க, சுஸ்மிதா கொணிதெல கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்குநர் வி வி விநாயக் இயக்க, இயக்குநர்கள் பி. கோபால், கோதண்டராமி ரெட்டி ஆகியோர் படத்தின் திரைக்கதையை தயாரிப்புக் குழுவினரிடம் வழங்கினர்.

திரையுலகில் சில கூட்டணிகள் உடனடி உற்சாகத்தையும் பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கும். அந்த வகையில், ‘வால்டர் வீரய்யா’ என்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு சிரஞ்சீவியும் பாபி கொல்லியும் மீண்டும் இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் ரசனையை மிகத் துல்லியமாகப் புரிந்துகொண்ட இயக்குநர் பாபி கொல்லி, இம்முறை இன்னும் வீரியமான மாஸ் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார். இதற்காக சிரஞ்சீவி தீவிரமாக உடற்பயிற்சி செய்து, உடல் தோற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி படத்திற்கான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement

தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களைத் தயாரித்து பெரும் வெற்றிகளைப் பெற்ற KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம், தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில், ‘ஜன நாயகன்’ மற்றும் ‘டாக்ஸிக்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட படைப்பாக #Chiru158 உருவாகிறது.

இப்படத்தில் மலையாள நடிகையும், ‘வித் லவ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவருமான அனஸ்வரா ராஜன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தென்னிந்திய திரையுலகின் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர். கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி திரைக்கதை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் நகைச்சுவை வசனங்களை திறமையான எழுத்தாளர்கள் குழு உருவாக்கியுள்ளது. இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு பணிகள் நாளை முதல் ஹைதராபாத்தில் முழுவீச்சில் தொடங்கவுள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in