LATEST NEWS
அதிமுக+பாஜக+பாமக ஆதரவு…? அண்ணாவின் அந்த மந்திரத்தை கையிலெடுத்து… CM விஜய் செய்யும் மேஜிக்…!!
அரசியல் கட்சித் தலைவரான நடிகர் விஜய், பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகளான “மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்” ஆகிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். விஜய்யின் இந்த உரை தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய் தனது கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அண்ணாவை உயர்த்திப் பிடிப்பதன் பின்னணியில் ஒரு அரசியல் உத்தி இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். அனைத்துக் கட்சியினரின் ஆதரவையும் தன் பக்கம் ஈர்ப்பதற்காகவே அவர் அண்ணாவின் கொள்கைகளைப் பேசி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் தனக்கு உடன்பாடில்லை என்று விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த ஆன்மீக/கடவுள் நம்பிக்கை சார்ந்த நிலைப்பாடு காரணமாக, அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் தரப்பிலிருந்தும் இவருக்கு ஆதரவு பெருகுமாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
