LATEST NEWS
“நடுரோட்டில் பரபரப்பு!.. எஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பிரபல இன்ஸ்டாகிராம் மாடல்.. பின்னணியில் நெஞ்சை உலுக்கும் சோகம்”..!!
கோண்டா எஸ்பி அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11:30 மணியளவில், பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்காபூரைச் சேர்ந்த ரூபாலி என்ற அந்த பெண், 13,000 பின்தொடர்பாளர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலமாவார். அங்கிருந்த பெண் போலீசார் அவரிடம் சாதுரியமாகப் பேசி, கவனத்தைத் திசைதிருப்பி, பெட்ரோல் பாட்டிலைப் பறித்து அவரைக் காவலில் எடுத்தனர். இந்த சம்பவம் குறித்து கூடுதல் எஸ்பி, தலைமை மருத்துவ அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
ரூபாலியின் குற்றச்சாட்டின்படி, கடந்த 2025 நவம்பரில் அவரது 9 வயது மகள் சித்தி, ரத்தத்தட்டுக்கள் குறைந்ததால் ஆஷா தேவி மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு 3 முதல் 4 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டதாகவும், இதற்காக ரூ.11,500 மற்றும் ரூ.50,000 செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், காலாவதியான ரத்தம் செலுத்தப்பட்டதாலேயே தன் மகள் உயிரிழந்ததாக ரூபாலி குற்றம் சாட்டுகிறார். கூலித் தொழிலாளியான தனது கணவருடன் இணைந்து, மகளின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்து அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
