LATEST NEWS
தவெகவில் வெடித்த “அசல் அணி VS அதிமுக அணி” மோதல்.. கதறும் பழைய நிர்வாகிகள் … அமைச்சர் என்.ஆனந்த் கொடுத்த அதிரடி உத்தரவு..!!
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிர்வாகிகளுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், தவெகவின் முக்கிய அமைச்சர் என்.ஆனந்த் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது தவெக கட்சிக்குள் பல்வேறு மாவட்டங்களில், பாரம்பரியமாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகள் ‘அசல் தவெக அணி’ என்றும், அதிமுகவிலிருந்து வந்தவர்கள் ‘அதிமுக அணி’ என்றும் இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய உள்முகக் குழப்பங்களுக்கு மத்தியில், கட்சியில் நீண்ட காலமாக இருக்கும் அதிருப்தி தவெக நிர்வாகிகளுடன் அமைச்சர் என்.ஆனந்த் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தவெகவின் அடிமட்ட நிர்வாகிகள் சிலர், “காலம் காலமாகத் தவெகவிற்காகவும், தலைவருக்காகவும் உழைத்த எங்களைக் கைவிட்டு விடாதீர்கள் அண்ணா” என்று தங்களது குமுறல்களை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளனர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், மாற்றுக்கட்சிகளில் இருந்தும், குறிப்பாக அதிமுகவிலிருந்தும் தவெகவிற்கு வந்தவர்களுக்கு உடனடியாகக் கட்சியில் எந்தவொரு முக்கியப் பதவியும் கொடுக்கும் திட்டம் தற்போது அரசிடமோ அல்லது தவெக தலைமையிடமோ இல்லை என்று திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளார்.
