LATEST NEWS
ஆரத்தி தட்டை ஏந்திய நொடி.. சுருண்டு விழுந்த பூசாரி..! பக்தர்களின் கண்முன்னே பிரிந்த உயிர்..! ராஞ்சியில் அதிர்ச்சி சம்பவம்..!!
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில், கோவிலில் கடவுளுக்குச் மாலை நேர ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்த போதே பூசாரி ஒருவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் நெஞ்சை உருக்கும் சம்பவம் ராஞ்சியின் ரத்து ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்திரபுரி வார்டு எண்-9 இல் உள்ள ஒரு கோவிலில் நிகழ்ந்துள்ளது.
இறந்துபோன பூசாரி ஆச்சார்யா ரஜினிகாந்த் மிஸ்ரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம் போல கோவிலில் பூஜைகள் செய்து கொண்டிருந்த அவர், சிவபெருமானுக்குச் மாலை நேர ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார். பக்தியுடன் டமருகம் மற்றும் சங்கு முழங்கி, கையில் தீபாராதனை தட்டை ஏந்தி அவர் ஆரத்தி எடுத்த சில நொடிகளில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நிலைகுலைந்து தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் நடந்த போது ஜார்க்கண்ட் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் சிங் மற்றும் பல பக்தர்கள் கோவிலில் இருந்தனர். அவர்கள் உடனடியாக பூசாரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். பக்தி பரவசத்துடன் பூஜையில் ஈடுபட்டிருந்த போதே பூசாரியின் உயிர் பிரிந்த இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த ராஞ்சி நகர மக்களிடையேயும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
