LATEST NEWS
ஓடும் பேருந்தில் ஜிப்பை திறந்து சைகை காட்டிய காமுகன்… பொறுமை இழந்து அந்த பெண் எடுத்த அதிரடி முடிவு.. மரண பயத்தை காட்டிய வைரல் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில், பேருந்து ஒன்றில் இரண்டு பெண்கள் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஓடிக்கொண்டிருந்த அந்தப் பேருந்தின் பின் இருக்கையிலிருந்து எழுந்த இளைஞன் ஒருவன், அந்தப் பெண்களுக்கு மிக அருகில் வந்து உரசியபடி நின்றுகொண்டிருந்தான். திடீரென அவன் தன் பேண்ட்டின் ஜிப்பைத் திறந்து, அந்தப் பெண்களுக்கு நேராக அநாகரிகமான முறையில் சைகை செய்து சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கினான்.
https://twitter.com/arunruby08/status/2076611477113590211/video/1
இத்தகைய இருகால் வெறிநாய்களைக் குணப்படுத்த, நம் நாட்டு மகள்கள் இதேபோன்று தைரியமாக மாற வேண்டியது அவசியமாகும். அந்த இளைஞனின் அநாகரிகச் செயலைக் கண்டு பயந்துவிடாமல், அங்கிருந்த ஒரு பெண் உடனடியாக எழுந்து அந்த இளைஞனைப் பிடித்து சரமாரியாக அடித்து வெளுத்தாள். அவளது இந்த அதிரடித் தாக்குதலைத் தாங்க முடியாமல், அந்தப் பொறுக்கி பயந்துபோய் பேருந்திலிருந்து தப்பியோடினான். இந்த சம்பவம் பேருந்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
