LATEST NEWS
“தலைவணங்க வைத்த குட்டிச் சிங்கம்..!” மரணத்தின் விளிம்பில் இருந்த சிறுமிகள்… 10 வயது சிறுவன் செய்த அசாத்திய காரியத்தைப் பாருங்கள்.. இந்தியாவையே நெகிழ வைத்த சம்பவம்..!!
சிறுவர்கள் பொம்மைகளுடன் விளையாடி மகிழும் 10 வயதிலேயே, மணிப்பூரைச் சேர்ந்த லைக்கான்சங் என்ற சிறுவன் தன் சாதுரியத்தாலும் துணிச்சலாலும் மூன்று உயிர்களைக் காப்பாற்றிப் பெரும் சாதனை படைத்துள்ளான். தனது கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததைக் கண்ட அச்சிறுவன், தனது உயிரைப் பற்றிக் சிறிதும் யோசிக்காமல் உடனடியாகக் குளத்தில் குதித்து, அந்த மூன்று சிறுமிகளையும் பத்திரமாக மீட்டுக்கரை சேர்த்தான்.
जिस उम्र में बच्चे खिलौनों से खेलते हैं, उस उम्र में मणिपुर के 10 साल के लालकानसुंग ने 3 ज़िंदगियाँ बचाईं।
एक तालाब में डूब रही तीन लड़कियों को देख उन्होंने बिना सोचे छलांग लगा दी और तीनों को सुरक्षित बाहर निकाल लिया।
इस बहादुरी के लिए तत्कालीन राष्ट्रपति रामनाथ कोविंद ने… pic.twitter.com/Rm18BZv1nr— Rahul Kumar (@MukAn_X) August 11, 2026
அச்சிறுவனின் இந்த இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டி, அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள், குடியரசுத் தலைவர் பவனில் நடைபெற்ற சிறப்பு விழாவில் சிறுவன் லைக்கான்சங்கிற்கு நாட்டின் உயரிய ‘பிரதமரின் தேசிய பால புரஸ்கார்’ வழங்கி கௌரவித்தார். மிகச் சிறிய வயதிலேயே உலகமே வியக்கும் வண்ணம் செயல்பட்டுத் தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்தச் சின்னஞ்சிறு வீரனின் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
