LATEST NEWS
டேய் என்கிட்டயேவா..? தீப்பந்தத்தைக் காட்டி விரட்டப் பார்த்த கிராம மக்கள்… தெறிக்கவிட்ட யானை… மரண பயத்தைக் காட்டிய ‘பரபரப்பு’ வைரல் வீடியோ..!!
நீரில் மூழ்கிய நெல் வயலில் புகுந்த ஒரு காட்டு யானையை, கிராம மக்கள் சிலர் தீப்பந்தங்களை அசைத்தும் கூச்சலிட்டும் விரட்ட முயன்றபோது, அந்த யானை திடீரென ஆக்ரோஷமடைந்து மக்களை நோக்கிப் பாய்ந்து வந்த அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முழங்கால் அளவு சேறும் சகதியுமான நெல் வயலில் தீப்பந்தங்களுடன் தங்களை நோக்கி வந்த மக்களைக் கண்டு யானை கோபமடைந்து வேகமாகப் பாய்ந்ததில், அங்கு நின்றவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். மக்கள் தப்பி ஓடும்போது சிலர் சேற்றில் விழுந்து நிலை தடுமாறும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவத்தின் வீடியோவை ஷ்யாம் ஓரான் மற்றும் சந்தோஷ் லக்ரா ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு, உத்தரகாண்ட் முதலமைச்சரின் சிறப்புச் செயலாளரான டாக்டர் பி.எம். தாகதே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சேறு நிறைந்த நிலப்பரப்பிலும் யானைகள் மனிதர்கள் எதிர்பார்ப்பதை விட மிக வேகமாக நகர முடியும் என்பதை சுட்டிக்காட்டிய அவர், மனிதர்களால் நடக்கவே முடியாத சேற்று நிலத்தில் யானையின் அகலமான பாதங்கள் அதன் எடையைச் சமமாகப் பிரித்து, மிகச் சில வினாடிகளிலேயே வேகத்தைப் பெற உதவுகின்றன என்று விளக்கினார்.
மேலும் காட்டு யானைகளை விரட்டுவதற்காகக் கூச்சலிடுவது, தீப்பந்தங்களை அசைப்பது அல்லது வெடிகளைக் கொளுத்துவது போன்ற செயல்கள் யானைகளைப் பயமுறுத்தாது, மாறாக தீவிர பீதியையே உண்டாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறு பயமடையும் ஒரு காட்டு யானை ஒருபோதும் பின்வாங்காமல், தற்காப்பிற்காக நேருக்கு நேராகத் தாக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. எனவே காட்டு யானைகளைக் கண்டால் போதிய பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்க வேண்டும், அவற்றை நாலாபுறமும் சூழ்ந்து கொள்ளக் கூடாது மற்றும் அவை தப்பிச் செல்வதற்கான பாதையை எப்போதும் அடைக்காமல் திறந்து வைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
