LATEST NEWS
“நூலிழையில் தப்பிய உயிர்… மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற இரண்டு சிறுமிகள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ”…!!
ஒரு சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக ஒரு அதிதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. மலை அருவி ஒன்றில் இரண்டு சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் இருவருமே நீரில் சிக்கித் தவித்தனர். அதில் ஒரு சிறுமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, எப்படியோ போராடி கரையை நெருங்கினாள். இதைப் பார்த்த மற்றொரு சிறுமி அவளைக் காப்பாற்றுவதற்காக தண்ணீருக்குள் குதித்தார். ஆனால், வெள்ளத்தின் வேகம் அவளையும் இழுக்கத் தொடங்கியது. அந்த இக்கட்டான தருணத்தில், கரையை அடைந்த முதல் சிறுமி துணிச்சலாகத் தனது தோழியின் முடியைப் பிடித்து இழுத்து, அவள் அடித்துச் செல்லப்படாமல் தடுத்து நிறுத்தினார். இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் போராடி, நூலிழையில் உயிர் தப்பி பத்திரமாக கரை திரும்பினர்.
थोड़ी सी चुक और बड़ी दुर्घटना ।
बाल बाल बची दो बेटियां।
दो लड़कियाँ पहाड़ के झरने में स्नान कर रही थीं । पानी के तेज बहाव के कारण वहां फंस गई
उनमें से एक लड़की पानी के बहाव में बह कर किसी तरह किनारे पहुंची
दूसरी उसको बचाने के लिए पानी में कूद गइ,
जिसके बाद पहली लड़की… pic.twitter.com/GkyaeLUkgX— premprakash (@pp73030711) July 17, 2026
“ஆழம் அறியாமல் காலை வைக்காதே” என்ற பழமொழிக்கு ஏற்ப, வேகமாக ஓடும் ஆறுகளிலோ அல்லது நீர்வீழ்ச்சிகளிலோ குளிப்பது என்பது மரணத்துடன் விளையாடுவதற்கு சமம். ஒரு நொடி அசாக்கிரதையும், நீர்நிலைகளைப் பற்றிய புரிதல் இல்லாததும் நம் உயிரையே பறித்துவிடும். எனவே, ஆபத்தான நீர்நிலைகளிலும் வேகமான நீரோட்டங்கள் உள்ள பகுதிகளிலும் குளிப்பதைத் தவிர்ப்பதே நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது. இல்லையெனில், இதுபோன்ற சம்பவங்கள் எல்லா நேரங்களிலும் அதிர்ஷ்டவசமாக முடிவதில்லை; பெரும் பேராபத்திலேயே கொண்டு போய் முடியும்.
