LATEST NEWS
நள்ளிரவு 12 மணி வரை இன்டர்நெட் கட்..! உள்துறை அமைச்சகத்தின் உத்தரவால் பரபரப்பு..!!
மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கமைய, இன்று நள்ளிரவு 12 மணி வரை அப்பகுதியில் இணைய சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, போராட்டக் களத்தைச் சுற்றியுள்ள சுமார் 1.5 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதியில் எவராலும் இணைய சேவையைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தங்களது தகவல்களையும் கருத்துகளையும் தடையின்றிப் பரிமாறிக்கொள்ள மாணவர்கள் மாற்று வழிகளைக் கையாண்டு வருகின்றனர். அதன்படி, இணைய சேவை முடக்கப்பட்ட போதிலும், போராட்டக் களத்தில் ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
