LATEST NEWS
இரவு 9 மணி ராபிடோ புக் செய்த இளைஞர்… பெண் டிரைவரை பார்த்ததும் மறுத்த பயணி… ஏம்மா இந்த நேரத்துல இந்த வேலை பாக்குற..? அந்த பெண் சொன்ன ஒரு வார்த்தை.. கண் கலங்கிய இளைஞர்..!!
அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு அந்த இளைஞர் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ‘ராபிடோ’ பைக் டாக்சியை பதிவு செய்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அவரை அழைத்துச் செல்ல வந்த ஓட்டுநரைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். ஏனெனில், அந்த பைக் ஓட்டுநர் ஒரு இளம் பெண்! இரவு நேரத்தில் ஒரு பெண் பைக் ஓட்டுநருடன் பயணிப்பதா என்ற தயக்கத்தில் அவர் சவாரியை மறுத்தார். ஆனால் அந்தப் பெண்ணோ, “வாருங்கள் அண்ணா, உட்காருங்கள்… நானும் உங்கள் தங்கை போன்றவள்தான்” என்று அன்போடு கூறி, OTP பெற்றுக்கொண்டு பயணத்தைத் தொடங்கினார்.
பயணம் தொடர்ந்துகொண்டிருந்தபோது, அந்த இளைஞனின் மனதில் இருந்த கேள்வி வெளியே வந்தது. “தங்கச்சி, இந்த நடுநிசி வேளையில் இப்படி ராபிடோ ஓட்டுவதற்கு வீட்டில் யாரும் எதுவும் சொல்வதில்லையா?” என்று பரிவோடு கேட்டார். அதற்கு அந்தப் பெண், “அப்பா இறந்துவிட்டார் அண்ணா… இப்போது குடும்பத்தின் முழுப் பொறுப்பும் என் தோள்களில்தான் விழுந்திருக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்ற இந்த வேலையைச் செய்தாக வேண்டிய கட்டாயம்” என்று சற்றும் தயக்கமின்றித் தன் சூழ்நிலையை விளக்கினார்.
அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்து சேர்ந்தது. பைக்கிலிருந்து இறங்கிய அந்த இளைஞர், அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் கண்டு மெய்சிலிர்த்தார். “உன்னைப் போன்ற தைரியமான மகள்களால் மட்டுமே இவ்வளவு பெரிய குடும்பப் பொறுப்பைத் தன் தோளில் சுமக்க முடியும் தங்கச்சி” என்று மனதாரப் பாராட்டினார். பின்னர், “உன் அண்ணனின் அன்பளிப்பாக இதை வைத்துக்கொள்” என்று கூறி, கட்டணத்தைத் தாண்டி ₹500 ரூபாயை அவரிடம் கொடுத்துத் தன் மரியாதையையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார்.
