Uncategorized
நடிகை திரிஷா என்ன பிரதமரா..? தண்ணி வராத வயிற்றெரிச்சலில் யாரோ திரிஷா பேரை சொல்லிட்டாங்க…. மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஆர்.எஸ் பாரதி..!!
நடிகை த்ரிஷா குறித்து பேசிய விவகாரத்தில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது என்று திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். த்ரிஷா ஒன்றும் பிரதமரோ அல்லது முதலமைச்சரோ இல்லை என்றும், அவருக்கு ஆதரவாக இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுப்பதன் அவசியம் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார். தமிழகத்தில் தண்ணீர் வரவில்லை என்ற பொதுமக்களின் வயிற்றெரிச்சலில், யாரோ த்ரிஷாவின் பெயரைப் பயன்படுத்திவிட்டதாக அவர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, அவர் ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படத்தில் மட்டுமே நடித்தாரே தவிர, நிஜத்தில் ஜனநாயகம் பற்றிய A, B, C கூட அறியாதவராக இருக்கிறார் என்று சாடியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் உதயநிதி ஸ்டாலின் கைது மற்றும் அதைத் தொடர்ந்த மோதல்களுக்கு மத்தியில், ஆர்.எஸ்.பாரதியின் இந்த விமர்சனம் திமுக மற்றும் தவெக இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
