LATEST NEWS
“போலீஸ் வாசலில் நின்ற தருணம்..!” மகனைக் கட்டிப்பிடித்து உதயநிதி சொன்ன அந்த கடைசி வார்த்தை… மனைவிக்கு பார்வையாலேயே ஆறுதல்.. நீலாங்கரை வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவதற்குச் சற்று முன்பாக, அவரது இல்லத்தில் நடைபெற்ற உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல்துறையினர் அவரை அழைத்துச் செல்வதற்கு முன்பாக, தனது மகன் இன்பநிதியை பாசத்தோடு கட்டியணைத்த உதயநிதி, “தைரியமாக இரு” என்று கூறி ஆறுதல் தெரிவித்தார். அதேபோல், தன் மனைவி கிருத்திகா உதயநிதியைப் பார்த்து உருக்கமுற்ற வேளையில், அவர் தனது பார்வையினாலேயே அவருக்குத் தைரியத்தையும் ஆறுதலையும் வழங்கி விடைபெற்றார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், திமுகவின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன், உதயநிதியைத் தழுவிக்கொண்டு “நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம்” எனத் தந்தை ஸ்தானத்தில் நின்று நம்பிக்கையளித்தார். மேலும், சபரீசன், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்து அவருக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர். கைதுக்கு முன்னதாகக் குடும்பத்தினரும் மூத்த தலைவர்களும் காட்டிய இந்த எமோஷனலான தருணம், திமுக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
