LATEST NEWS
இங்கிலாந்தில் 6 மணி நேரம்…! ஆனா இங்க வெறும் 1 மணி நேரம் தான்… துபாய் மருத்துவமனையின் மின்னல் வேக சிகிச்சையைப் பார்த்து… மிரண்ட இந்திய பெண்..!!
துபாயின் மருத்துவச் சேவை அமைப்பைப் பாராட்டி இந்திய வம்சாவளி பெண் ஒருவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மிருதுளா என்ற அந்தப் பெண், தனது காலில் காயம் ஏற்பட்டதால் துபாயில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற 5 நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ளது. மேலும், பரிசோதனை, காலில் கட்டு போடுதல் மற்றும் மருந்துகள் வாங்குவது என அனைத்துச் செயல்பாடுகளும் ஒரே மணி நேரத்திற்குள் நிறைவடைந்துள்ளன.
மருத்துவமனையில் தனது காலின் அமைப்பு குறித்துக் கேட்டு, அதற்கு ஏற்றவாறு தையல்/கட்டு போட்டதாக மிருதுளா தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, அவரது மருத்துவக் குறிப்புகள் அடங்கிய சிடி மற்றும் தேவையான மருந்துகளையும் உடனடியாகக் கொடுத்துள்ளனர். இதற்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவரைச் சந்திக்க 6 மணி நேரம் காத்திருந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், துபாயில் இவ்வளவு சிறப்பான சிகிச்சை கிடைத்ததற்குத் தான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DbxVqcMIOsa/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. பலரும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்தில் தாங்கள் பெற்ற மருத்துவ அனுபவங்களை இதனுடன் ஒப்பிட்டுப் பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன்கள் சிலர், “இதுதான் துபாய்!” என்றும், “அமீரகத்தின் சிறந்த வசதிகளால் நாம் பழகிப்போய்விட்டோம்” என்றும் இப் பதிவில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
