CRIME
“எனக்கு பிள்ளைகளும் வேண்டாம், புருசனும் வேண்டாம்!”.. 5 குழந்தைகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு 19 வயது வாலிபருடன் எஸ்கேப் ஆன பெண்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், தனது வீட்டில் அன்பான கணவன் மற்றும் ஐந்து பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, ராங் நம்பர் மூலம் அறிமுகமான 19 வயது வாலிபனுடன் ஓட்டம் பிடித்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒருநாள் எதிர்பாராதவிதமாக அந்தப் பெண்ணின் அலைபேசிக்கு வந்த ஒரு தவறான அழைப்பின் மூலம், 19 வயது வாலிபனுடன் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த அழைப்பைத் துண்டிக்காமல் தொடர்ச்சியாகப் பேசி வந்ததால், இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது தீவிரக் காதலாக மாறியுள்ளது. போன் மூலமாகவே தங்களது காதலை வளர்த்து வந்த அந்தப் பெண், ஒரு கட்டத்தில் தனது பெற்ற பிள்ளைகள் மற்றும் கணவனைப் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல், அந்த இளம் வயதுக் காதலனுடன் வீட்டை விட்டு இரகசியமாக வெளியேறியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண் காதலனுடன் மேற்கு வங்காள மாநிலத்திற்குச் சென்று, அங்குள்ள ஒரு கோயிலில் ரகசியமாகத் திருமணமும் செய்துகொண்டுள்ளார். மேலும், “நான் இனிமேல் எனது பழைய குடும்பத்துடன் சேர்ந்து வாழ மாட்டேன், இந்த வாலிபனுடன் மட்டுமே என் வாழ்க்கை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். காதலைத் தேர்ந்தெடுப்பது அவரது தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், தற்பொழுது தாயின் பாசமும் அரவணைப்பும் தேவைப்படும் அந்த ஐந்து அப்பாவிப் பிள்ளைகளின் நிலைதான் மிகவும் பரிதாபகரமாக மாறியுள்ளது. தற்பொழுது மனைவியை இழந்த ஏழைக் கணவர், தனது ஐந்து குழந்தைகளையும் கையில் பிடித்துக்கொண்டு, கதிகலங்கிப் போன நிலையில் நீதிக்காகப் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அலைந்து திரிந்து புகார் அளித்து வருகிறார்.
