LATEST NEWS
அட கடவுளே… ஆசை ஆசையா காதலிச்சு கட்டிக்கிட்ட புருஷன்…! அவன பிரிஞ்சிடுன்னு பெற்றோர் கொடுத்த டார்ச்சர்… பிகாரில் பூட்டிய அறையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்..! கணவனின் நண்பன் சொன்ன பகீர் தகவல்..!!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மதுபால் என்ற பெண், தனது வாடகை வீட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆசிரியர் பணியாளர் தேர்வு மூலம் தேர்வாகிப் பணியாற்றி வந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு கௌரவ் குமார் பால் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரக்ஷா பந்தன் விழாவிற்காகச் சொந்த ஊருக்குச் சென்று திரும்பிய அவர், ஆகஸ்ட் 29 அன்று வழக்கம்போல் பள்ளி முடிந்து அறைக்குத் திரும்பியுள்ளார். மாலையில் மதுபால் தொலைபேசி அழைப்புகளை ஏற்காததால் கணவர் கொடுத்த தகவலின் பேரில், வீட்டின் உரிமையாளரும் போலீஸாரும் சென்று பூட்டிய கதவைத் திறந்து அவரது உடலைக் கைப்பற்றினர்.
சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் குழுவினர் மாதிரிகளைச் சேகரித்த நிலையில், மதுபாலின் அறைக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர். இதற்கிடையே, மதுபாலின் காதல் திருமணத்திற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கணவரை விட்டுப் பிரிந்து வேறொரு திருமணம் செய்துகொள்ளுமாறு அவருக்குக் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்ததாகவும் கணவரின் நண்பர் அஜித் பால் குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும், இவை அனைத்தும் கணவரின் நண்பர் தெரிவித்த தகவல்களாக மட்டுமே உள்ளதால், சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுபுறம், மதுபால் மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களிடம் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர் என்று பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மதுபாலின் உடல் தற்போது மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது உடற்கூராய்வு அறிக்கை மற்றும் போலீஸாரின் விரிவான விசாரணை முடிவிலேயே முழுமையாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
