CRIME
“ஐயோ கடவுளே.. குளத்தில் உயிருக்குப் போராடிய தம்பி… சுயநினைவில்லாமல் குதித்த அக்காக்கள்..!” ரக்ஷா பந்தன் திருவிழா நாளிலேயே ஒரே குடும்பத்தில் அணைந்த 4 விளக்குகள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
பாசமே எமனாக மாறிய கொடூரம் தம்பியைக் காப்பாற்றச் சென்ற மூன்று சகோதரிகள் தண்ணீரில் மூழ்கிப் பலி என்ற நெஞ்சை உலுக்கும் மாபெரும் விபரீதம் ராஜஸ்தான் மாநிலம் தோல்ப்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரவி குமார் (21), அவரது அன்புச் சகோதரிகள் மனோரமா (22), போட்டோ (25) மற்றும் அவர்களது உறவினர் பெண் நிஷா (18) ஆகிய நால்வரும் ரக்ஷா பந்தன் பண்டிகைக்காகப் பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா கோயிலுக்குச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் கோயில் வளாகக் குளத்தில் அவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது, ரவி குமார் எதிர்பாராதவிதமாகக் கால் நழுவிக் குளத்தின் அசுர ஆழமான பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். தம்பி தண்ணீருக்குள் தத்தளித்து உயிருக்குப் போராடுவதைக் கண்ட சகோதரிகளும் உறவினரும், தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் பாசப் போராட்டத்துடன் அவசர அவசரமாக ஆழமான பகுதிக்குள் குதித்துள்ளனர். ஆனால், நீரின் அசுர வேகமும் சுழலும் அவர்களைக் கரை திரும்ப விடாமல் ஒட்டுமொத்தமாக நீருக்குள் மூழ்கடித்துக் கொடூரமாகப் பலிவாங்கியுள்ளது.
இக்கோர விபத்தைக் கண்டு அலறிய அங்கிருந்த பக்தர்களும் உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த மேலும் 4 பக்தர்களைச் சமயோசிதமாகச் செயல்பட்டுப் பத்திரமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அங்காய் காவல் நிலைய அதிகாரி கிருபால் சிங் தலைமையிலான மீட்புக் குழுவினர், கிராமவாசிகளின் உதவியோடு தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களிலேயே மூன்று பெண்களின் உடல்களும் குளத்திலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், நீரின் அடிமட்டத்திற்குச் சென்ற ரவி குமாரின் உடலை மீட்கச் சுமார் 6 மணி நேரம் அசுரப் போராட்டம் நடத்தப்பட்டுப் காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு நால்வரின் உடல்களும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தம்பிக்குக் காப்புக்கட்டி மகிழ வேண்டிய ரக்ஷா பந்தன் திருவிழா நாளிலேயே ஒரே குடும்பத்தின் 4 வாரிசுகளும் ஒன்றாகச் சடலமாக மீட்கப்பட்ட அவலம் நாதூவாபுரா கிராம மக்களைச் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
