LATEST NEWS
1 நிமிடத்தில் 9 தொழில்நுட்பக் கோளாறுகள்… ஏர் இந்தியா விமானத்தில் நடந்தது என்ன..? அதிர்ச்சி பின்னணி..!!
ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறும் ஒரு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானம் சென்று கொண்டிருந்தபோது, ஒரே நிமிடத்தில் அடுத்தடுத்து 9 தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பைலட்கள், நிலைமையைச் சமாளித்து விமானத்தை அவசரமாகத் தரையிறக்க தீவிர முயற்சி செய்துள்ளனர்.
இந்தத் திடீர் கோளாறுகளின் காரணமாக, சில விநாடிகளுக்குள் விமானம் சுமார் 300 அடி உயரத்திலிருந்து கிடுகிடுவெனக் கீழே இறங்கியது. இதில் ஏற்பட்ட கடும் அதிர்வில் பயணிகள் இருக்கைகளிலிருந்து தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதனிடையே, பணியில் இருந்த பைலட் போதையில் இருந்ததாக எழுந்த புகாரையடுத்து, அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் தீவிர பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
