LATEST NEWS
CM விஜய் அதிரடி சிக்சர்..! ரூ.264 கோடியில் 65 அதிரடிப்படைகள்… போதைப்பொருளுக்கு என்ட் கார்டு..!!
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் உயரிய நோக்கத்துடன் 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்படவுள்ளன.
இந்தச் சிறப்பு நடவடிக்கையின் கீழ், தலைநகர் சென்னையில் மட்டும் 12 அதிரடிப்படைகள் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அதேவேளையில், மாநிலத்தின் இதர 37 மாவட்டங்களுக்கும் தலா ஒரு அதிரடிப்படை வீதம் அமைத்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
