LATEST NEWS
“நான் முதல்வராக இருந்திருந்தால்…!” தமிழர்களைச் சுட்டுவிட்டு இங்கு வர முடியுமா..? கர்நாடக அரசை நோக்கி மதுரையில் சீமான் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!
நான் முதலமைச்சராக இருந்திருந்தால் கர்நாடகாவில் தமிழர்களைச் சுடும் எண்ணமே வந்திருக்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார். அதாவது, தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அண்டை மாநில அரசியல் அணுகுமுறைகள் குறித்து அவர் தனது உரையில் கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
தமிழர்களைச் சுட்டுவிட்டு, அந்த மாநில முதலமைச்சர் இந்தத் தமிழ் நிலத்திற்குள் கால் வைத்திருக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் அவருக்கு எப்படி வரவேற்பு பேனர்கள் வைத்திருக்க முடியும் என்றும், தனது ஆட்சியாக இருந்திருந்தால் இதற்கு நிச்சயம் இடமிருந்திருக்காது என்றும் அவர் சாடியுள்ளார்.
