LATEST NEWS
பாஸ்..! “உன்னை எப்படி உன் நாட்டுல உயிரோட விட்ருக்காங்க” அப்படின்னு அமெரிக்காவுல கேட்டாங்க… நானா என்ன சொன்னேன் தெரியுமா..? சீமான் உடைத்த உண்மை..!!
அமெரிக்காவில் தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கிருந்த அதிகாரிகள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் தன்னிடம் விசாரணை நடத்திய போது, “உன்னை எப்படி உன் நாட்டில் உயிரோடு விட்டுள்ளார்கள்?” என்று வியப்புடன் கேட்டதாக சீமான் தனது உரையில் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் தன்னை ‘பாஸ்’ என்றுதான் அழைத்தார்கள் என்றும், “நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்ன?” என்று அவர்கள் கேட்டபோது, “சொன்னால் என் கட்சியில் சேர்வீர்களா?” என்று தான் திருப்பிக் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் சிரித்துவிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
