LATEST NEWS
“நானும் 2 நாளா பாக்குறேன் யாருமே இல்ல” சபாநாயகர் வந்து சீட்டில் உட்கார்ந்ததும் யாராச்சும் கண்டிப்பா அங்க இருக்கணும்… சபாநாயகரிடம் தளவாய் சுந்தரம் அதிரடி குற்றச்சாட்டு..!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, அதிகாரிகள் அமரும் கேலரி காலியாகக் கிடப்பது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சபாநாயகரிடம் முன்வைத்த அதிரடி குற்றச்சாட்டு அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவையில் பேசிய அவர், “கேலரியில ஏதாவது ஒரு ஆபீசர் இருக்காங்களா பாருங்க.. சபாநாயகர் வந்து சீட்டில் உட்கார்ந்ததும் யாராச்சும் கண்டிப்பா அங்க இருக்கணும். ஆனா நான் கடந்த 2 நாட்களா கவனிச்சுப் பார்க்கிறேன், அங்க யாருமே இல்லை” என்று மிகவும் கவலையுடனும் ஆவேசத்துடனும் சுட்டிக்காட்டினார்.
அரசின் மானியக் கோரிக்கைகள் மற்றும் முக்கிய விவாதங்கள் பேரவையில் நடைபெறும் வேளையில், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கேலரியில் நேரில் இருந்து குறிப்புகளை எடுக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், அவ்வாறு அதிகாரிகள் யாரும் பேரவைக்கு வராமல் அலட்சியமாக இருப்பதை சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற தளவாய் சுந்தரம், இந்த விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதிமுக எம்.எல்.ஏ-வின் இந்தக் காரசாரமான குற்றச்சாட்டும், அதற்குப் பின்னால் இருக்கும் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
