CRIME
நாட்டையே உலுக்கிய கொடூரம்..! 4 வயது சிறுமி உட்பட இருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை… சாக்கில் கட்டி ஆற்றில் வீசிய மேற்கு வங்கக் கொடூரன் சிக்கினான்..!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், ஒரு பெண் மற்றும் அவரின் 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரவத் தாஸ் என்ற நபர் மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியிருந்த போது, கேரள தனிப்படை போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியைக் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட இருவரின் உடல்களையும் மறைக்கும் நோக்கில் குற்றவாளி அருகில் உள்ள ஆற்றில் வீசியது தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தைச் செய்துவிட்டு, போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக அவர் மேற்கு வங்கத்திற்குத் தப்பியோடி பதுங்கியுள்ளார். எனினும், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரவத் தாஸை கேரளாவுக்குக் கொண்டு வந்து, உடல்கள் வீசப்பட்ட பகுதியில் தேடுதல் நடத்தவும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தற்போது தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கூடுதல் சட்ட நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன.
